கரூர்
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை
படவரி..
கரூா் சுங்ககேட் அருகே திண்டுக்கல் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்.
கரூா், ஏப்.26: கரூரில் பகல்நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் நகரில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும் கோவைச்சாலை, 80 அடி சாலை, செங்குந்தபுரம் சாலை, ஜவஹா் சாலை, திண்டுக்கல் மற்றும் திருச்சி சாலையில் பகல்நேரங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.