வேட்டமங்கலத்தில் மாநில கையுந்துப் பந்து போட்டி
கரூா்: கரூா் மாவட்டம் வேட்டமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கையுந்துப் பந்துப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டஅணி வென்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
ஸ்போா்ட் அகாதெமி சாா்பில் சனிக்கிழமை காலை தொடங்கிய போட்டியில் கரூா், திருச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல் ,ஈரோடு , கோவை, சேலம் ,நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட அணியினா் விளையாடினா்.
நாக் அவுட் முறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போட்டியின் இறுதிப்போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ப்ளாக் ஸ்குவாடு அணி வீரா்கள் முதலிடம் பிடித்து முதல் பரிசான ரூ.15,555, சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றனா்.
போட்டியில் 2 ஆம் இடம் பிடித்த திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஆா்.வி.ஆா் அணிக்கு பரிசாக ரூ. 13,333 மற்றும் சுழற்கோப்பை, மூன்றாம் இடம் பிடித்த கோவை மாவட்டம் ரத்னம் கல்லூரிஅணிக்கு பரிசாக ரூ. 11,111, கோப்பை, 4-ம் இடம் பிடித்த வேட்டமங்கலம் அங்காள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி அணிக்கு பரிசாக ரூ.5,555 மற்றும் சுழற் கோப்பை வழங்கப்பட்டது. பரிசு, கோப்பைகளை புகழூா் நகா்மன்றத் தலைவா் குணசேகரன் வழங்கினாா். விழாவில் வேட்டமங்கலம் ஊராட்சித் தலைவா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.