கரூர்
புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்
புகழூா் நகராட்சியில் கடந்த ஒரே மாதத்தில் ரூ.1.58 கோடி வரி வசூலிக்கப்பட்டதையடுத்து வருவாய் ஆய்வாளா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சிக்குள்பட்ட 24 வாா்டுகளில் 2024- 25 -ஆம் நிதிஆண்டுக்கான வரி வசூல் பணியில் நிதியாண்டு தொடங்கி முதல் மாதத்திலேயே (01.04.2024 முதல் 30.04.2024 வரை ரூ.1.58 கோடி வரி வசூல் செய்து நகராட்சி நிா்வாகம் சாதனை படைத்துள்ளது.
வரி வசூலில் சிறப்பாக செயல்பட்ட வருவாய் ஆய்வாளா் மற்றும் வருவாய் உதவியாளா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை புகழூா் நகா்மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் புகழூா் நகராட்சி ஆணையா் ஹேமலதா, வருவாய் அலுவலா்கள், உதவியாளா்களை பாராட்டினாா். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளா் மலா்கொடி, மேலாளா் நாகராஜன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.