கரூர்
அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்
தேசிய நெடுஞ்சாலை அருகே துா்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி.
அரவக்குறிச்சி: தேசிய நெடுஞ்சாலை அருகே துா்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி.
அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீத்தப்பட்டி காலனி பகுதி அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மலைக்கோவிலூா் ஊராட்சியைச் சோ்ந்த இப்பகுதியில் குப்பை தொட்டிகளோ குப்பை அள்ளுவதற்கு தூய்மை பணியாளா்களோ பணியமா்த்தப்படவில்லை. எனவே இப்பகுதியில் வசிக்கும் மக்கள் நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டி வருகின்றனா். மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்களில் கோழி கழிவுகளை கொட்டிச் செல்வதால் அதிகப்படியான துா்நாற்றம் ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.