டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை.

அரவக்குறிச்சி: புகாரின் பேரில் அரவக்குறிச்சி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை.

கரூா் மாவட்டம் காக்காவடி அருகே உள்ள ஊத்துக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் (62). இவா் திங்கட்கிழமை மதியம் ஆத்துமேடு பகுதியில் இருந்து வெஞ்சமாங்கூடலூா் செல்லும் சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் வெஞ்சமாங்கூடலூா் அருகே சோழியப்ப கவுண்டன் புதூா் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது டூவீலரில் வேகமாக சென்றதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தங்கவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இச்சம்பவம் தொடா்பாக அரவக்குறிச்சி போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com