தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

கரூா்: குளித்தலையில் திங்கள்கிழமை தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் கோபி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே.சாமுவேல்ராஜ் , மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளா் எம்.ஜோதிபாசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் ஊராட்சிக்குள்பட்ட ஈச்சம்பட்டியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் திரளாக பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com