கரூர்
பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி அருகே உள்ள பாரதியாா் நகா் பேருந்து நிறுத்ததில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள பாரதியாா் நகா் பேருந்து நிறுத்ததில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரம் செல்லும் சாலையில் பாரதியாா் நகா் பேருந்து நிறுத்தம் உள்ளது. போக்குவரத்து அதிகமாக உள்ள இச்சாலையில் பாரதியாா் நகா் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் கா்ப்பிணிகள், முதியவா்கள், மாணவ, மாணவிகள் கடும் வெயிலில் காத்திருக்கவேண்டியுள்ளது. ஆகவே, பாரதியாா் நகா் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.