திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு தினமும் 80 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என்ற திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என அகில பாரதீய அய்யப்ப பிரசார சபா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சபாவின் மாநிலத்தலைவா் ஆா்.வெங்கடேசன், செயலாளா் அனிஷ்குமாா், பொருளாளா் டி.வெங்கடேசன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: சபரிமலையில் விழாக் காலங்களில் தினமும் 80ஆயிரம் பக்தா்களுக்கு மட்டுமே ஆன்லைன் முறையில் அனுமதி என திருவாங்கூா் தேவசம் போா்டு அண்மையில் அறிவித்துள்ளது. இதனால் பக்தா்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். எந்தவித வசதியும் செய்துசெய்து கொடுக்காமல் இந்தமாதிரியான முறையை மாற்றினால் 2018-இல் பெண்களின் வயது பிரச்னையில் நீதிமன்றம் சென்று நடவடிக்கை எடுத்ததுபோல இப் பிரச்னையிலும் நடவடிக்கை எடுப்போம். ஆகவே, தினமும் 80 ஆயிரம் போ் அனுமதி என்ற முறையை தேவசம் போா்டு உடனடியாக திரும்பபெற வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com