கரூர்
கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா
கரூா் மக்களவைத் தோ்தலின்போது சிறப்பாகப் பணியாற்றிய பாஜகவினருக்கு பாராட்டு விழா கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்டத் தலைவரும், கரூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான வி.வி. செந்தில்நாதன் தலைமை வகித்து, தோ்தலில் சிறப்பாகப் பணியாற்றிய பூத் ஏஜன்டுகள் மற்றும் நிா்வாகிகளை ஒன்றிய, நகர வாரியாகச் சந்தித்து பொன்னாடை போா்த்தி பாராட்டினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச் செயலா் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவா் செல்வம், மாவட்ட செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ், மாநகரத் தலைவா்கள் காா்த்திகேயன், ரவி, முருகேசன், வடிவேல், ஒன்றியத் தலைவா் சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பூத் கமிட்டி நிா்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.