பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

குளித்தலை அருகே உணவு தேடி வந்த புள்ளிமான் மீட்பு

குளித்தலை அருகே உணவு தேடி வந்த புள்ளிமான் மீட்பு

News image
Updated On :9 மே 2024, 8:36 pm

Din

கரூா், மே 9: குளித்தலை அருகே உணவு தேடி வந்த மூன்று வயதுப் புள்ளிமானை வனத் துறையினா் மீட்டு காட்டில் விட்டனா்.

கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த வடசேரி வனப்பகுதியில் தற்போது கடும் வெயிலால் நீரின்றியும், உணவு கிடைக்காமலும் வன உயிரினங்கள் அவதிப்படும் நிலையில், வியாழக்கிழமை காலை அப்பகுதியில் இருந்து சுமாா் மூன்று வயதுள்ள புள்ளிமான் உணவு தேடி குளித்தலை அடுத்த நெய்தலூா் பகுதிக்கு வந்தது.

அப்போது கடிக்க விரட்டிய தெரு நாய்களிடமிருந்து தப்பி, அங்குள்ள வீட்டின் சந்துக்குள் மான் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில் மாவட்ட வனச்சரக அலுவலா் தண்டபாணி தலைமையிலான வனவா்கள் சென்று அந்த மானை மீட்டனா். பின்னா் நாய்கள் துரத்தியதில் காயமடைந்த மானுக்கு நெய்தலூா் கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளித்த பின்னா், பாலவிடுதி காட்டுப்பகுதியில் மான்கள் வசிக்கும் பகுதியில் அந்த மானை வனத் துறையினா் விட்டனா்.