பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆக. 9-ம் தேதி நடைபெற உள்ளது என்றார் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் சி. தேவராஜ்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக. 9-ம் தேதி காலை 11 மணி முதல், பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றார் அவர்.