நூலகத் தந்தை பிறந்த நாள், நூலகர் தினவிழா

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில், நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதனின் 125-வது பிறந்த நாள் விழா மற்றும் 8-வது நூலகர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில், நூலகத் தந்தை டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதனின் 125-வது பிறந்த நாள் விழா மற்றும் 8-வது நூலகர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, மாவட்ட நூலக அலுவலர் சி. அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் பி. தயாளன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் பா. பாஸ்கரன் ஆகியோர் நூலகர்களுக்கும், ஓய்வுபெற்ற நூலர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். இதில்,  திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழக நூலகத்துறை பேராசிரியர் ச. ரெங்கநாதன்,  வாசகர் வட்ட உறுப்பினர் கவிஞர் அகவி மற்றும் நூலகர்கள் மற்றும் நூலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.மாவட்ட மைய நூலகர் இரா. சந்திரசேகரன் வரவேற்றார். நூலகர் ஆ. செல்வராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com