பெரம்பலூர் மாவட்டம், அயன்பேரையூர் விஷ்டம் பள்ளி வளாகத்தில் கடலூர் மண்டல அளவிலான கைப்பந்து தேர்வுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) நடைபெற உள்ளன.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் தெரிவித்துள்ளது:
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில், கடலூர் மண்டல அளவிலான கைப்பந்து தேர்வுப் போட்டிகள் பெரம்பலூர் மாவட்டம், அயன்பேரையூரில் உள்ள விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இப்போட்டி, வயது மற்றும் பிரிவு வாரியாக 14, 17, 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில், பெரம்பலூர், அரியலூர், கரூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். போட்டிகளில் பங்கேற்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நிறைவுசெய்யப்பட்ட 2 நுழைவுப் படிவங்களுடன் வரவேண்டும்.