பெரம்பலூரில் ரெளடி வெட்டிக்கொலை

பெரம்பலூரில், பிரபல ரெளடியை புதன்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்த 3 இளைஞர்கள், பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 

பெரம்பலூரில், பிரபல ரெளடியை புதன்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்த 3 இளைஞர்கள், பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். 
பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவன் மார்க்கெட் பன்னீர் (எ) பன்னீர்செல்வம் (34). பிரபல ரெளடியான இவர் மீது, 2 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் பெரம்பலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. 
இந்நிலையில், பெரம்பலூர் அங்காளம்மன் கோயில் அருகே புதன்கிழமை இரவு மர்ம கும்பல் ஒன்று, பன்னீர்செல்வத்தை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். 
புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் கே.கே. நகரை சேர்ந்த ரத்தினம் மகன் கதிரவன் (23), வினோத் (23), தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த விக்னேஷ் (23)  ஆகிய 3 பேரும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இக்கொலையில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.  
உயிரிழந்த பன்னீர்செல்வம், கொலை வழக்கில் தொடர்புடையவர் என்பதால் பழிக்குப்பலியாக இந்தக் கொலை நடந்திருக்காலம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com