பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற வெங்கம் பகுதி தலைவர் ச. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். அரும்பாவூர் கிளைத் தலைவர் இ. தாஹீர்பாட்சா, பூலாம்பாடி பகுதி தலைவர் தமிழோவியன், பெரம்பலூர் மாவட்டச் செயலர் சா. காப்பியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பி. தயாளன், சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, நான் ரசித்த சங்க இலக்கியக் காட்சி எனும் தலைப்பில், நிர்வாகிகள் பேராசிரியர் மு. முத்துமாறன், கவிஞர் ச. மோகன், த. வினிதா ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். கவிஞர் ந. பத்மநாபன் வரவேற்றார். கவிஞர் மோகன் நன்றி கூறினார்.