வனத்துறை பணி: இலவச மாதிரித்தேர்வெழுத அழைப்பு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வனத்துறைப் பணிக்கான இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 22,23 தேதிகளில் நடைபெற உள்ளன.

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வனத்துறைப் பணிக்கான இலவச மாதிரித் தேர்வு நவம்பர் 22,23 தேதிகளில் நடைபெற உள்ளன.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைதேடும்  மாணவ, மாணவிகளுக்கு அவ்வப்போது வெளியிடப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தன்னார்வப் பயிலும் வட்டத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 726 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், மாதிரித் தேர்வு நவம்பர் 22,23 தேதிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நடைபெறஉள்ளது. எனவே மாவட்டத்தில் இத்தேர்வெழுத விண்ணப்பித்தோர் இந்த தேர்வில் பங்கேற்று பயன்பெறலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com