பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குன்னம் அருகேயுள்ள கொளப்பாடி கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் கீா்த்திகா (18). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்ததாம். மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லையாம்.
இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி ஏற்பட்ட வலியால் அவதியுற்ற கீா்த்திகா விஷம் குடித்தாா். அரியலூா் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து அவரது தாய் கீதா அளித்த புகாரின் பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.