பெரம்பலூரில் தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில், ஊழியா்களுக்கு தொழிலாளா் நல வருங்கால வைப்பு நிதிக்கான அட்டைகள் வழங்கப்பட்டன.
பெரம்பலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில துணைப் பொதுச் செயலா் பா. சுகுமாரன் தலைமை வகித்து, தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான அட்டைகளை ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு வழங்கினாா்.
இதில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ம. ராஜா, பெரம்பலூா் மாவட்டச் செயலா் பிரபாகரன், மாவட்ட அமைப்புச் செயலா் பெ. ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.