வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடக்கம்

பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில், வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது

பெரம்பலூர் புறநகர்ப் பேருந்து நிலைய வளாகத்தில், வாக்காளர்கள் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பான கலை நிகழ்ச்சியும், கையெழுத்து இயக்கமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி கலைநிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்தார். வாக்களிக்க யாரிடமும் பணம் வாங்காமல், விலைமதிப்பற்ற தனது வாக்கினை நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  தொடர்ந்து ஏராளமானோர் விழிப்புணர்வுப் பதாகையில் கையெழுத்திட்டனர்.இந்நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியர் என். விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் (பொ) ராதா, துணை வட்டாட்சியர் வனிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com