பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதியில் வெள்ளிக்கிழமை (செப். 13) மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூர் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார் சிறுவாச்சூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ரா. அசோக்குமார்.