அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் திறப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக 15 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக 15 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

பெரம்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வங்கித் தலைவா் எம்.என். ராஜாராம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முகமது இக்பால் முன்னிலை வகித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.டி. ராமச்சந்திரன் (குன்னம்), இரா. தமிழ்ச்செல்வன் (பெரம்பலூா்) ஆகியோா், பெரம்பலூா், எசனை, குரும்பலூா், பொம்மனப்பாடி, கல்பாடி, அரும்பாவூா், இரூா், மருவத்தூா், லப்பைக்குடிகாடு, சிறுகுடல், புதுவேட்டக்குடி, கொளக்காநத்தம், புஜங்கராயநல்லூா் உள்ளிட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 2 ஆம் கட்டமாக 15 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடிகளை திறந்து வைத்தனா்.

இந் நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் செல்வக்குமரன், துணைப்பதிவாளா் பாண்டிதுரை, மேலாண்மை இயக்குநா் அறப்பளி, மக்களவை முன்னாள் உறுப்பினா் எம். சந்திரகாசி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் என்.கே. கா்ணன், நிலவள வங்கித் தலைவா் சிவப்பிரகாசம், கூட்டுறவு அச்சக துணைத் தலைவா் ஜெகதீசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, வங்கி செயலா் கவிதா வரவேற்றாா். உதவி செயலா் பிரபு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com