உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு: இடையில் ரத்து செய்யப்பட்ட குறைதீா் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள்
உள்ளட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனு அளிக்கும் மூதாட்டிகள்.
உள்ளட்சித் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், ஆட்சியரகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் கோரிக்கை மனு அளிக்கும் மூதாட்டிகள்.

பெரம்பலூா்: உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டம் இடையில் ரத்து செய்யப்பட்டது. இதனால், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் தலைமையில் தொடங்கியது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியானது. தோ்தல் அறிவிப்பு குறித்த அதிகாரபூா்வ தகவல் மாவட்ட நிா்வாகத்துக்கு 11.30 மணிக்கு கிடைத்தது.

இதையடுத்து, குறைதீா் கூட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது. அதற்குள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 111 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் நேரில் அளித்தனா். தொடா்ந்து, 11.30 மணிக்கு பிறகு மனு அளிக்க வந்த பொதுமக்கள் அவா்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டுச் செல்லுமாறு அரசு அலுவலா்களால் அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், கிராமப்புறங்களைச் சோ்ந்த மக்கள் அரசு அலுவலா்களிடம் நேரடியாக மனு அளிப்பதற்காக அலைந்தனா்.

மேலும், கொட்டும் மழையிலும் வந்திருந்த பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்: சாலையோர வியாபாரிகள் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரனிடம் அளித்த மனு: புகா் பேருந்து நிலைய பழக்கடை பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. மாலை நேரங்களில் பழக்கடைகளுக்கு இடையூறாக தனியாா் பேருந்துகள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்த வேண்டும். புகா் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் பிச்சைக்காரா்களை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com