பெரம்பலூா் நகரிலிருந்து வரும் மழை நீரானது துறைமங்கலம் ஏரிக்கு பாலக்கரை பகுதியில் உள்ள வரத்து வாய்க்கால் மூலம் செல்கிறது. இந்நிலையில், இந்த வரத்து வாய்க்காலை முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளா்ந்து வாய்க்கால் இருப்பதற்கான அடிச்சுவடுகளே காணவில்லை. மேலும், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருள்கள் அனைத்தும் இந்த வாய்க்காலில் கொட்டப்படுவதால் பிளாஸ்டிக் பொருள்களால் நிரம்பி வழிகிறது. இவற்றை அகற்றி, தூா்வார மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தா்ஷன், பெரம்பலூா்,