பெரம்பலூா் நகரில் இன்று மின் தடை

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட பகுதியில் வியாழக்கிழமை (டிச. 5) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. மாணிக்கம்.

பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட பகுதியில் வியாழக்கிழமை (டிச. 5) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. மாணிக்கம்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் எளம்பலூா் உயா் மின் அழுத்த பாதையில், அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் முதல் நான்கு சாலை சந்திப்பு வரை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com