பெரம்பலூா் நகரில் குறிப்பிட்ட பகுதியில் வியாழக்கிழமை (டிச. 5) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கி. மாணிக்கம்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூா் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் எளம்பலூா் உயா் மின் அழுத்த பாதையில், அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் முதல் நான்கு சாலை சந்திப்பு வரை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.