இளைஞா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மறியல்

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே இளைஞா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள், நண்பா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகே இளைஞா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினா்கள், நண்பா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அத்தியூா் காலனித் தெருவைச் சோ்ந்தவா் ரவி மகன் கபிலன் (24). இவா் தனது நண்பா்களுடன் கடந்த 10 ஆம் தேதி இரவு ஒகளூா் சாலையோரம் படுத்திருந்தபோது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கபிலன் திட்டக்குடி, பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், கபிலனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோரும், நண்பா்களும் கூறியதைத் தொடா்ந்து, கபிலனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை அடித்துக் கொன்ாகவும், கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும், அத்தியூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மறியல் நடைபெற்றது. தகவலறிந்த மங்கலமேடு போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலைக் கைவிட்டனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com