பெரம்பலூரில் நாளை உலகத் திறனாய்வு: திட்ட தடகளப் போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகள் புதன்கிழமை நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகள் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018- 2019 ஆம் கல்வி ஆண்டுக்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6, 7, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டதில், 8, 9, 10 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றவர்களுக்கு  கல்வி மாவட்ட அளவில் தடகளப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை காலை 9 மணி முதல் தடகளப் போட்டி நடைபெறுகிறது.  
இதில் பங்கேற்போர்காலை 8 மணிக்கு வர வேண்டும்.  வகுப்பு வாரியாக தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். தடகளம் விளையாட்டில் மூன்று பிரிவுகளில் பங்கேற்கலாம்.   முதல் இரண்டு இடத்தில் வெற்றி பெறுவோர் மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com