ஜனவரி 16, 21, 26 ஆகிய தேதிகளில் பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட மதுக் கடைகள், மதுக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவள்ளுவர் தினத்தையொட்டி, ஜன. 16 ஆம் தேதியும், வள்ளலார் நினைவு தினத்தையொட்டி, ஜன. 21-ஆம் தேதியும், குடியரசு தினத்தையொட்டி ஜன. 26 ஆம் தேதியும் பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து மதுக் கடைகள், மதுக் கூடங்கள், உணவகங்களுடன் கூடிய மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.