பெரம்பலூர் போலீஸார் சனிக்கிழமை திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, பெரம்பலூர்- அருமடல் சாலையில் நின்றிருந்த நபரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில் அவர் சித்தளி கிராமம், மேற்கு தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் காசிநாதன் (34) என்பதும், அனுமதியின்றி மது விற்றதும் தெரியவந்தது. இதேபோல, பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் மது விற்ற லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் மகன் கிருபானந்தனை (52) கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 115 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.