பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2017- 18 மற்றும் 2018- 19 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்து முடித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, இதுவரை தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையி ட்டும் பலனில்லை. இதனால், அதிருப்தியடைந்த எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற சுமார் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் மடிக்கணினி வழங்கக் கோரி எசனை காட்டு மாரியம்மன் கோயில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் பேச்சுவார்த்தையில் நடத்தியதில், மாணவ, மாணவிகள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல, வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்களும் மறியலில் ஈடுபட்டனர்.