பெரம்பலூரில் 21- இல் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.


பெரம்பலூரில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21 ஆம் தேதி ரோவர் பள்ளி வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 8 ஆம் வகுப்பு முதல் பி.இ. முடித்தவர்கள் வரை தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும், பெரம்பலூரில் உள்ள உள்ளுர் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான மற்றும் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க விருப்பம் உள்ளவர்கள், தங்களது நிறுவனத்தின் பெயர், காலிப்பணியிடங்கள், பணியின் பெயர், சம்பளம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை க்ங்ர்ல்ங்ழ்ஹம்க்ஷஹப்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் மின்னஞ்சல் முகவரியிலும், 04328-225352 என்னும் எண்ணிலும் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com