பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் முகாமில் 277 பயனாளிகளுக்கு ரூ. 1.31 கோடி மதிபபில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமை வகித்து பல்வேறு துறைகள் சார்பில் 277 பயனாளிகளுக்கு ரூ. 1,31,72,031 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மனோகரன், வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) சந்தானகிருஷ்ணன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.