பெரம்பலூர் அருகேயுள்ள அம்மாபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், உலகச் சுற்றுச் சூழல் தினவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமொழி தலைமை வகித்தார். விழாவையொட்டி, காற்று மாசுபடுவதை முறியடிப்போம் எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில், 10 ஆம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா முதல் பரிசும், 7 ஆம் வகுப்பு மாணவி சுஷ்மிதா இரண்டாம் பரிசும், 9 ஆம் வகுப்பு மாணவர் கோபிநாத் 3 ஆம் பரிசும் வென்றனர். இதேபோல ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் ராமர் வரவேற்றார். தமிழாசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.