மினி பேருந்து கவிழ்ந்து 5 மாணவ, மாணவிகள் காயம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை காலை சாலையோர பள்ளத்தில்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று திங்கள்கிழமை காலை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவ, மாணவிகள் 5 பேர் காயமடைந்தனர். 
       பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மேலமாத்தூர் அருகேயுள்ள வரிசைப்பட்டி கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி சார்பில் இயக்கப்படும் மினி பேருந்து மூலம் பல்வேறு கிராமங்களிலிருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, திங்கள்கிழமை காலை வயலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 5 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்ட மினிப் பேருந்து, ஓலைப்பாடி சாலை வளைவில் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மினி பேருந்தில் பயணம் செய்த 4 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இவர்கள் வேப்பூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து குறித்து குன்னம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com