கொளக்காநத்தம் நூலகத்தில் கவிதை நூல்கள் மதிப்பீடு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில், நூலக வாசகர் வட்டத்தின் தமிழ்ச்சோலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொளக்காநத்தம் ஊர்ப்புற நூலகத்தில், நூலக வாசகர் வட்டத்தின் தமிழ்ச்சோலை இலக்கிய மன்றம் சார்பில், கவிதை நூல்கள் மதிப்பீட்டரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தமிழாய்வு நிறைஞர் ச. ஜான்சிராணி தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தலைவர் ம. வெங்கடாசலம், இலக்கிய ஆர்வலர் த. ராசோக்கியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ந.கண்ணையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். வைரமுத்து, அறிவுமதி, ந. முத்துக்குமார், பட்டுக்கோட்டை கல்யாணச்சுந்தரம் ஆகியோரின் கவிதை நூல்களைப் பற்றி வாசகர்கள் திறனாய்வு செய்து பேசினர்.
இதில், நூலகர் ரெ.ராஜா, இலக்கிய ஆர்வலர்கள் க. சக்கரபாணி, சா. குடிக்காடு சு. சுகுமார், பெ. தனவேல், இரா. பார்கவி நூலக வாசகர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர். நூலக வாசகர் பெ. மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com