பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் 70 பேர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 5 முதல் 8 வயது, 8 வயதுக்கு மேற்பட்ட 12 வயதுக்குள்பட்டவர், 12 வயதுக்கு மேற்பட்ட 16 வயதுக்குள்பட்டவர் ஆகிய 3 பிரிவுகளில் வாய்ப்பாட்டு (குரலிசை), நடனம், கிராமிய நடனம், ஓவியம் ஆகிய கலைப் போட்டிகள் நடைபெற்றது. இதில், 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் பக்கிரிசாமி, பாரதி, ஹேமா, சுந்தரமூர்த்தி, முருகேசன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றினர். 9 -12 வயதுக்குள்பட்ட பிரிவு, 12 -16 வயதுக்குள்பட்ட பிரிவில் மாவட்ட அளவில் முத ல்பரிசு பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.