சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் அறிமுகக் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ஜராஜேந்திரன், சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினர் மா. சந்திரகாசி, வேப்பூர் ஒன்றிய செயலர் பி. கிருஷ்ணசாமி, ஆலத்தூர் ஒன்றிய செயலர் என்.கே. கர்ணன், செந்துரை ஒன்றிய செயலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிதம்பரம் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் பேசியது: சிதம்பரம் மக்களவை தொகுதி மக்களின் தேவையை அறிந்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வேன் என்றார் அவர்.
பின்னர், பாட்டாளி மக்கள் கட்சி மாநில நிர்வாகி வைத்தி, பாமக மாவட்ட செயலர் செந்தில்குமார், தேமுதிக மாவட்ட செயலர் துரை. காமராஜ், பாஜக கோட்ட பொருப்பாளர் ம. சிவசுப்ரமண்யம், பாஜக மாவட்ட செயலர் சாமி. இளங்கோவன் மற்றும் புதிய தமிழகம், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து அதிமுக வேட்பாளர் ஆதரவு திரட்டினார்.