100% தேர்ச்சி: ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பாராட்டு
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு உதவிய ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்தினார் அதன் தாளாளர் அ. சீனிவாசன்.
10 ஆம் வகுப்பு அரசுப் பொது த்தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதில், திருச்சி உறையூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் தமிழ்வழி கல்வி பள்ளி, மெட்ரிக் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதையடுத்து மாணவ, மாணவிகளையும், 100 சதவீத தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி இனிப்பு வழங்கினார் அக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன். நிகழ்ச்சியின்போது மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் செல்வமணி, பிரேமலதா, தமிழ்வழிக் கல்வி முதல்வர்கள் சாந்தி, கோவிந்தசாமி மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.