மோட்டார் சைக்கிள் திருட்டு

பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (45).

பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் வசிப்பவர் செந்தில்குமார் (45).
 இவர், பாமக மாவட்ட செயலராக உள்ளார். மேலும், அவரது வீட்டின் அருகே டைல்ஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி தனது வீட்டின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெளியூர் சென்றிருந்த அவர், கடந்த 11ஆம் தேதி மீண்டும் வீட்டுக்கு வந்தாராம். அப்போது வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை காணவில்லையாம். இதுகுறித்து செந்தில்குமார் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com