பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஊட்டத்தூரை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அறிவழகன் (37). இவர், வெள்ளிக்கிழமை இரவு பாடாலூர்- ஊட்டத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சென்றராம். நீண்ட நேரத்துக்குப் பிறகு வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அறிவழகன் அளித்த புகாரின்பேரில், பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.