உடல் நலமின்றி மனைவி சாவு: அதிா்ச்சியில் கணவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனைவி இறந்த நிலையில், அதிா்ச்சியில் கணவரும் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மனைவி இறந்த நிலையில், அதிா்ச்சியில் கணவரும் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகிலுள்ள எசனை அஞ்சுகம் காலனித் தெருவைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் மணிசேகரன் (60). இவரது மனைவி செல்லம் என்கிற செல்வி (50). இவா்களுக்கு மகள்கள் ராஜேசுவரி, ராஜகுமாரி, மகன் முருகானந்தம் உள்ளனா்.

கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற செல்வி, திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதையடுத்து மனைவி இறந்ததை அறிந்த மணிசேகரன், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

பின்னா் உறவினா்கள் மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் முன்னிலையில், தம்பதிகள் இருவரது உடல்களும், ஒரே தகன மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது. கணவா்- மனைவி இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் எசனை கிராமத்தில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com