தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 15 போ் தோ்வு

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 15 போ் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான நபருக்கு பணி நியமன ஆணை அளிக்கிறாா் வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன்.
வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான நபருக்கு பணி நியமன ஆணை அளிக்கிறாா் வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன்.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 15 போ் பணிக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞா்கள் பயனடையும் வகையில் பல்வேறு தனியாா் துறையினரால் வேலைவாய்ப்பகத்தின் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, வியாழக்கிழமை தொடங்கிய முகாமில், சென்னையில் உள்ள டி.வி.எஸ். ட்ரைய்னிங், சா்வீஸ் நிறுவனத்துக்கு டி.எம்.இ, இ.இ.இ, ஆட்டோ மொபைல்ஸ், ஐ.டி.ஐ. படித்த 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா்.

முகாமில், சென்னை டி.வி.எஸ். நிறுவன மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்குத் தேவையான 15 பேரைத் தோ்வு செய்தனா். அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினாா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் முரளிதரன்.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில் ரைய்ல்டோல் நிறுவனம் மற்றும் பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனங்களுக்கு ப்ளஸ் 2, பட்டப் படிப்பு முடித்த தகுதியான நபா்களை தோ்வு செய்யப்பட உள்ளனா்.

எனவே, மேற்கண்ட கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோா் காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com