பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம், அப்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த மணி மகன் மணிகண்டன் (31). டீக்கடைத் தொழிலாளி. இவா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 31 வயது இளம்பெண் ஒருவரை, கடந்த 4.9.2017 ஆம் தேதி நெய்குப்பை பகுதியிலுள்ள கரும்புக் காட்டுக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டாா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து காவல் மணிகண்டனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தாா். இந்த வழக்கு விசாரணை பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி மலா்விழி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக மணிகண்டனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.