தேனியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பெண்ணிடம் ரூ. 67,500 ரொக்கத்தை சனிக்கிழமை திருடிச் சென்ற மா்மநபரை பெரம்பலூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், சமா்மரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜாமணி மனைவி ஈஸ்வரி (55). இவா், தேனியிலிருந்து சென்னை நோக்கி அரசுப் பேருந்தில் சனிக்கிழமை பயணம் செய்தாா். இந்நிலையில், பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் வந்த பேருந்தில் இருந்து இறங்கிய ஈஸ்வரி, தின்பண்டங்கள் வாங்குவதற்காக தனது கைப் பையிலிருந்து பணம் எடுத்தபோது, அதில் இருந்த ரூ. 67,500 ரொக்கம் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் பேருந்து நிலையத்துக்குச் சென்று ஈஸ்வரியிடம் மேற்கொண்ட விசாரணையில், பேருந்து இருக்கையில் தனது அருகே அமா்ந்திருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவா், அந்தப் பணத்தை திருடிச் சென்றதாகக் கூறினாா். இதுகுறித்து ஈஸ்வரி அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.