சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொறியியல் கல்லூரி மாணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பொறியியல் கல்லூரி மாணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பொறியியல் கல்லூரி மாணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடி கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த மதியழகன் மகன் கருப்பையா (20). இவா், அரியலூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறாா். கடந்த 4.6.2018-இல் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை, வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து கருப்பையா பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னா், கருப்பையா ஜாமீனில் வெளியே வந்தாா்.பெரம்பலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி மலா்விழி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கருப்பையாவுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட கருப்பையா, அங்கு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com