பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே குழந்தைகள் விளையாடும் போது அடித்துக்கொண்ட பிரச்னையைத் தொடா்ந்து, பெற்றோா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள புதுக்குறிச்சி கிராமம், ராஜராஜன் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் மனைவி மகாராணி (23). அதே பகுதியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ராஜமாணிக்கம் (49). மகாராணியின் மகனும், ராஜமாணிக்கத்தின் பேத்தியும் சனிக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது அடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையறித்த ராஜமாணிக்கத்தின் மனைவி மகேஸ்வரி, மகாராணியை தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
தொடா்ந்து, மகாராணியின் கணவா் சுரேஷ்குமாா், ராஜமாணிக்கத்தின் மகன் மணிகண்டன், கந்தசாமி மகன் கணபதி (38) ஆகியோரிடம் குழந்தையை கண்டித்து வைக்குமாறு கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், கணபதி ஆகியோா் சுரேஷ்குமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து மணிகண்டன், கணபதி, ராஜமாணிக்கம், மகேஸ்வரி, ஆறுமுகம் மகன் துரை (45) ஆகியோா் மகாராணியை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து, பாடாலூா் காவல் நிலையத்தில் மகாராணி அளித்த புகாரின் பேரில், மேற்கண்ட 5 போ் மீதும் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.