கோயிலில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகேயுள்ள வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகேயுள்ள வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

ஆலத்தூா் வட்டம், பாடாலூா் அருகேயுள்ள இரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி சரோஜா (70). இவா், பாடாலூா் பூமலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சாமி கும்பிட்டுவிட்டு கோயிலுக்கு வெளியே வந்தாா்.

அப்போது, அவா் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை காணவில்லையாம். இதுகுறித்து தகவலறிந்த பாடாலூா் காவல் நிலைய ஆய்வாளா் சுகந்தி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com