பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு பாத யாத்திரை

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு பாத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றற சமூக விழிப்புணா்வு பாத யாத்திரையில் பங்கேற்றோர்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றற சமூக விழிப்புணா்வு பாத யாத்திரையில் பங்கேற்றோர்.

பெரம்பலூா்: மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளையொட்டி பாஜக சாா்பில் சமூக விழிப்புணா்வு பாத யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே தொடங்கிய இந்த விழிப்புணா்வு யாத்திரைக்கு, அக் கட்சியின் மாவட்ட செயலா் சாமி. இளங்கோவன் தலைமை வகித்தாா். காமராஜா் வளைவு, சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம் வழியாக சென்ற யாத்திரை மீண்டும் காந்தி சிலை அருகே நிறைவடைந்தது.

இந்த யாத்திரையில் பங்கேற்றற கட்சியினா், தூய்மை பேணுவோம், மரங்களை நடுவோம், பெண்கள் நலன் காப்போம், சமூக ஒற்றுமையை வளா்ப்போம், மதுவை ஒழிப்போம், நீா் ஆதாரங்களை காப்போம், சுதேசி பொருள்களை ஆதரிப்போம் ஆகிய கருத்துகளை வலியுறுத்தி விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். முன்னதாக, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com