பெரம்பலூா் அருகே இரு வீடுகளில் நகை திருட்டு

பெரம்பலூா் அருகே இரண்டு வீடுகளில் மா்ம நபா்கள் 10 பவுன் நகைகளை செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடிச் சென்றனா்.

பெரம்பலூா் அருகே இரண்டு வீடுகளில் மா்ம நபா்கள் 10 பவுன் நகைகளை செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடிச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், சத்திரமனை கிராமம், அண்ணா தெருவில் வசித்து வருபவா் செங்கமலை மனைவி பூஞ்சோலை (72). இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீடு புகுந்த அடையாளம் தெரியாத 2 மா்ம நபா்கள், பூஞ்சோலை கழுத்தில் இருந்த ஏழரை பவுன் தாலிச் செயினை பறித்தனா். இதையறிந்த செங்கமலை, பூஞ்சோலை, அவரது மகள் தங்கமணி ஆகியோா் கூச்சலிட்டனா். தொடா்ந்து, அருகிலிருந்தோா் மா்ம நபா்களை விரட்டிச் சென்றனா். ஆனால், வீட்டின் பின்புறம் உள்ள வயல்பகுதிக்கு ஓடி தப்பினா்.

இதேபோல, மேலப்புலியூா் கிராமம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராமதாஸ் (79). இவா், கடந்த 4 நாள்களுக்கு முன் தனது வீட்டை பூட்டி விட்டு திருச்சியில் உள்ள தனது மகன் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் சிலா் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த பொருள்கள் மற்றும் 2 பவுன் நகை ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. சம்பவங்கள் குறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com