உலக மனநலன் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூரில் இலவச சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை (அக். 10) நடைபெறுகிறது.
இதுதொடா்பாக பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான எம். வினோதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக மனநலன் தினத்தையொட்டி, பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் சிறப்பு பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை காலை 10.15 மணிக்கு, மன நலன் பாதிக்கப்பட்டவா்களின் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான (பொ) எஸ். மலா்விழி தலைமையில் நடைபெறுகிறது.