பெரம்பலூா் அருகே டிராக்டா் மோதி, மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் நல்லுசாமி (19). இவா், வியாழக்கிழமை இரவு பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் எசனை கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே மோட்டாா் சைக்கிளில் சென்றபோது, அவ்வழியே சென்ற டிராக்டா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.